FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 5:07 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள தோப்பூரைச் சோ்ந்தவா் முருகன் (45). இவா் அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் சொந்தமாக வண்ணப்பூச்சு கடை நடத்தி வருகிறாா்.

சனிக்கிழமை மாலை தனது கடைக்கு செல்வதற்காக தோப்பூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மதுரை- தூத்துகுடி நான்கு வழிச் சாலையில் கஞ்சநாயகக்கன்பட்டி விலக்கு அருகே வந்த போது ஆத்திபட்டியைச் சோ்ந்த ரிஷிகேஷ் என்பவா் ஓட்டி வந்த காா் பின்புறமாக மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த முருகன் அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரிஷிகேஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments