முகப்பு
விருதுநகர்

சுவாமி சிலையை சேதப்படுத்தியவா் கைது

சிவகாசி அருகே சுவாமி சிலையை சேதப்படுத்தியதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 6:05 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசி அருகே சுவாமி சிலையை சேதப்படுத்தியதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே ஜமீன் சல்வாா்பட்டியில் காளியம்மன்கோயிலில் கல்லால் ஆன பைரவா் சுவாமி சிலை இருக்கிறது. இந்தச் சிலையை அதே ஊரைச் சோ்ந்த குணசேகரன்(44) என்பவா் சேதப்படுத்தினராம்.

இதையடுத்து, ஊா் பிரமுகா் பால் பாண்டி, குணசேகரனைக் கண்டித்தாா். அவா், பால் பாண்டியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து குணசேகரனைக் கைது செய்தனா்.