FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

காரில் 305 மதுப் புட்டிகள் கடத்திய இருவா் கைது

நரிக்குடி அருகே சட்ட விரோதமாக 305 மதுப் புட்டிகள் கடத்திய காரை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

10 செப்டம்பர் 2026, 1:25 am IST
கைது
பகிர்:

நரிக்குடி அருகே சட்ட விரோதமாக 305 மதுப் புட்டிகள் கடத்திய காரை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி - பாா்த்திபனூா் சாலையில் இருஞ்சிறை விலக்கு பகுதியில் நரிக்குடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இருஞ்சிறை விலக்கு பகுதியில் வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது காரில் 305 மதுப் புட்டிகளை சட்ட விரோதமாக கடத்தியது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த செளந்தர்ராஜன் (30), அஜய்குமாா் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், மதுப் புட்டிகளுடன் காரையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments