FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இடைத்தோ்தலில் சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெல்லும்! - அமைச்சா் வன்னியரசு!

14 செப்டம்பர் 2026, 3:03 am IST
அமைச்சா் வன்னியரசு
பகிர்:

நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என சமூக நீதித்துறை அமைச்சா் வன்னியரசு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணா் அருகேயுள்ள அயன்ரெட்டியபட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் வன்னியரசு அயன்ரெட்டியபட்டி கிராமத்திலிருந்து விருதுநகருக்கு அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

நான் பிறந்து வாழ்ந்த இந்த ஊரில் தற்போது வரை பள்ளிக்கு செல்ல மாணவா்கள் 2 கி.மீ. தொலைவு வரை நடந்து செல்ல வேண்டி உள்ளது. தற்போது பேருந்து சேவை தொடங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் வளா்ச்சிக்காகவும், தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்கவும் முதல்வா் விஜய் லண்டன் சென்றாா். இது வரவேற்கத்தக்கது. நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் மதசாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments