பேல்பூரி - 13-09-2026
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ஆட்டோவில் கண்ட வாசகம்
கண்டது...
(நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ஆட்டோவில் கண்ட வாசகம்)
'இந்த உலகில் சந்தோஷமாக இருப்பவர்கள் இருவர்...
Advertisement
Advertisement
ஒருவர் கல்யாணம் பண்ணாதவர்; மற்றவர் செல்போன் இல்லாதவர்!'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
(வேலூரில் வேன் ஒன்றில் இடம்பெற்றிருந்த வாசகம்)
'வான் மழையால் உலகம் செழிக்கும்...
கருணை மழையால் மனிதம் சிறக்கும்!'
-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
(விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'நமஸ்கரித்தான்பட்டி.'
- ச.ஜான்ரவி, கோவில்பட்டி.
கேட்டது...
(கோவையில் கட்சி அலுவலகம் ஒன்றில்)
'தலைவருக்கு ரொம்ப காஸ்ட்லியான மாலை போட்டீங்களாமே?'
'ஆமா... சின்ன வெங்காயமும் பெரிய வெங்காயமும் கோத்துக் கட்டி மாலை போட்டோம்!'
-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.
( மதுரை பேருந்தில் இருவர்)
'பத்து வருஷமா கொடுத்த வீட்டு வாடகைக்கு சொந்தமாக வீடே வாங்கி இருக்கலாம்!'
'நீ வேற... நான் வாங்கிய வீட்டுக் கடனுக்கு பத்து வருஷமா வட்டிதான் கட்டிக்கிட்டு இருக்கேன்... அசல் அப்படியே இருக்கு!'
-நா.குழந்தைவேலு, மதுரை.
யோசிக்கிறாங்கப்பா...
'பொய்க்கு ஆரம்பம் இல்லை. ஆனால், முடிவு உண்டு.
உண்மைக்கு ஆரம்பம் உண்டு. ஆனால், முடிவு இல்லை.
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.