கடலைப்பருப்பு இனிப்பு இட்லி
அரிசி, கடலைபருப்பை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் களைந்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்கு அரைக்கவும்.
தேவையான பொருள்கள் :
கடலை பருப்பு - 300 கிராம்
பச்சரிசி - 25 கிராம்
கருப்பட்டி - 300 கிராம்
ஏலக்காய் - 4
தேங்காய் துருவல் - ஒரு கிண்ணம்
சோடா உப்பு - சிறிதளவு
செய்முறை :
Advertisement
Advertisement
அரிசி, கடலைபருப்பை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் களைந்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்கு அரைக்கவும். இதனுடன் கருப்பட்டி ஏலக்காய் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக அரைத்து எடுக்கவும். பிறகு தேங்காய் துருவல் சோடா உப்பு சேர்த்து இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இனிப்பான கடலை பருப்பு இட்லி தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.