FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

சமையல் குறிப்புகள்..

சமைக்கும்போது கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

Updated On : 22 டிசம்பர் 2024, 12:00 am IST
பகிர்:

சமைக்கும்போது கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

காய்கறி சாலட் செய்யும்போது, ஒரு கிண்ணம் பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சாலட்டில் போட்டால் சுவையாகவும், அருமையாகவும் இருக்கும்.

மோர் குழம்பின் மகிமை: மோர் குழம்புக்கு அரைக்கும் கலவையுடன் ஒரு தேக்கரண்டி கடுகையும் சேர்த்து அரைத்து மோர்குழம்பு செய்தால், வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

Advertisement

Advertisement

மோர் குழம்பை இறக்கியவுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

மோர் குழம்பு செய்யும்போது மோர் அல்லது தயிருடன் ஒரு தேக்கரண்டி கடலைமாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டால், மோர் குழம்பு திரிந்து போகாமல் சுவையாக இருக்கும்.

மாங்காய் தொக்கின் மகத்துவம்: -மாங்காய் தொக்கு செய்யும்போது, மாங்காய்களைத் துருவி சேர்ப்பதற்குப் பதிலாக, தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்துவிட்டால் தொக்கு செய்ய சுலபமாக இருக்கும்.

 மாங்காய்களைத் தோல் சீவி, துருவி வெயிலில் உலர்த்தினால் இரண்டு நாள்களில் வடகம் போல் நன்கு காய்ந்து உலர்ந்து விடும். இதை மிக்ஸியில் அரைத்தால் புளிக் குழம்புக்குத் தேவைப்படும்போது உபயோகித்துகொள்ளலாம்.

 மாங்காய் இனிப்பு பச்சடி செய்யும்போது, தோலை சீவாமல் அப்படியே செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

 மாங்காயைத் துண்டுகளாக நறுக்கி தேவையான உப்பு, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் ஊற வைத்த மாங்காய் துண்டுகளை வெயிலில் இரண்டு நாள்கள் வரை காய வைத்து மா வத்தலை செய்யலாம்.

 புளிப்பில்லாத மாங்காய்களை தோல் சீவி வேக வைத்து சர்க்கரைப் பாகுடன் அடுப்பில் வைத்து கிளறி ஜாமாகச் செய்து சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments