FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

கோடைக்கு ஏற்ற பானங்கள்..

வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பாரம்பரிய குளிர்பானங்கள்

Updated On : 26 மே 2024, 5:00 pm IST
பகிர்:

வெயிலின் தாக்கத்தை குளிர்பானங்களால் குறைக்க முடியும். அதிலும், பாரம்பரிய உணவில் புத்துணர்வு, சக்தி ஊட்டக் கூடிய ஆரோக்கியமான குளிர்பானங்கள் சிறப்பு வாய்ந்தவை.

மசாலா மோர்: தயிர், தண்ணீர், மசாலா பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலந்து நுரையுடன் பரிமாறப்படும் சுவையான பானம். இது தாகத்தைத் தீர்ப்பதோடு உடல் சூட்டையும் தணிக்கும்.

லஸ்லி: தயிருடன் சர்க்கரை, தண்ணீர், சில நறுமணப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், புரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் அதிகமாகவே உள்ளன.

Advertisement

Advertisement

எலுமிச்சைச் சாறு: இது எளிதாகச் செய்யக் கூடிய பானமாகும். வைட்டமின் சி, பி மற்றும் தாது உப்புகள் நிறைந்த பானமாகும்.

சீரக நீர்: சீரகம், நீர், மிளகு, புதினா கலந்த பானம் பசியைத் தூண்டுவதோடு புத்துணர்வையும் அளிக்கும். புளிப்பு, கார சுவையுடையது.

கரும்புச் சாறு: கரும்புச் சாறுக்கு கோடைக்காலத்தில் நல்ல வரவேற்பு உண்டு. இது உடலுக்கு புத்துணர்வை அளிக்கும். மிகவும் விலை குறைந்த பானம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments