புடலங்காய் அடை 
மகளிர்மணி

புடலங்காய் அடை

புடலங்காய் அடை செய்வதற்கு முதலில் புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொள்ளு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள் :

புடலங்காய் - 1

புழுங்கலரிசி, பச்சரிசி - தலா 2 கிண்ணம்

கடலைப் பருப்பு , துவரம் பருப்பு - தலா 1 கிண்ணம்

உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு - கால் கிண்ணம்

கொள்ளு - 4 மேசைக்கரண்டி

புதினா - கால் கிண்ணம்

நறுக்கிய சின்ன வெங்காயம் - 20

காய்ந்த மிளகாய் - 10

சீரகம் - 1 மேசைக்கரண்டி

தனியா - 4 மேசைக்கரண்டி

பெருங்காயம் - 2 சிட்டிகை

பூண்டு - 10 பல்

கடுகு - 1 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு , எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

புடலங்காய் அடை செய்வதற்கு முதலில் புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொள்ளு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்கு அரைக்கவும். புடலங்காயைப் பொடியாக நறுக்கவும்.

பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம், புதினா, பொடியாக நறுக்கிய புடலங்காய், அதனுள்ளே இருக்கும் விதை, சதைப்பகுதி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள புடலங்காய் கலவையை சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெயை தடவி, கலக்கி வைத்துள்ள மாவு கலவையில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து மொத்தமாக ஊத்தப்பம் போல் ஊற்றி மூடி வேகவைக்கவும். ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, தோசையை சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான புடலங்காய் அடை தயார். இந்த அடையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT