கடலைப் பொங்கல்
கடலைப் பருப்பை நன்றாகச் சுத்தம் செய்து, நெய் விட்டு வறுத்து, தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:42 PM
கடலைப் பருப்பு, அரிசி, சர்க்கரை- தலா 250 கிராம்
நெய் -200 கிராம்
தேங்காய் -ஒரு மூடி
Advertisement
முந்திரிப்பருப்பு- 50 கிராம்
பச்சைக் கற்பூரம் -சிறிதளவு
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:42 PM
செய்முறை:
கடலைப் பருப்பை நன்றாகச் சுத்தம் செய்து, நெய் விட்டு வறுத்து, தண்ணீரில் வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து போட்டு வேக விட வேண்டும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் தேங்காயைத் துருவி சர்க்கரையுடன் கலந்து போட்டுக் கிளற வேண்டும்.
நன்றாக வெந்ததும் முந்திரிப் பருப்பையும், ஏலக்காய்ப் பொடியையும் நெய்யையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிவிடவேண்டும். நன்றாக ஆறியபின் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.