FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

சமையல் டிப்ஸ்...

கீரை, முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு போன்றவற்றில் உள்ள சத்து வீணாகாமல் இருக்க வேண்டுமென்றால், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேக வைக்க வேண்டும்.

Updated On : 29 மார்ச் 2026, 4:01 am IST
கொத்துமல்லி
பகிர்:

கீரை, முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு போன்றவற்றில் உள்ள சத்து வீணாகாமல் இருக்க வேண்டுமென்றால், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேக வைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கினால் கறி மிக ருசியாக இருக்கும்.

கடலைப்பருப்புடன், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து போளி செய்தால் அதன் சுவையே அலாதி தான்.

Advertisement

Advertisement

ஈரமான காய்கறிகளை ஒரு பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை சீக்கிரமாக அழுகிப்போகாது.

கொத்துமல்லித்தழையை ரசத்தில் போட்டு விட்டு அதன் தண்டை வீணாக்காமல் காய வைத்து, ரசப்பொடியில் சேர்த்து அரைக்கவும். வாசனையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments