FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: ஒற்றுமையே பலம்!

ஒன்று ஒன்றாய் இருக்கும் தடியைஉடைக்க முடியுமே - அதனை

Updated On : 23 மே 2015, 2:51 pm IST
பகிர்:

ஒன்று ஒன்றாய் இருக்கும் தடியை

உடைக்க முடியுமே - அதனை

ஒன்றாய் சேர்த்து கட்டி வைத்தால்

Advertisement

Advertisement

வலிமை நிறையுமே!

காட்டில் ஐந்து பசுக்கள் சேர்ந்து

வாழ்ந்து வந்தது - என்றும்

கனிந்த நட்பால் ஒன்றாய் இருந்து

கலந்து மகிழ்ந்தது!

கிடைக்கும் உணவை பகிர்ந்து கொண்டு

நிறைவு கண்டது - அவைகள்

நடக்கும்போதும் உறங்கும்போதும்

இணைந்து கொண்டது!

இரையைத் தேடி சிங்கம் ஒன்று

அலைந்து திரிந்தது! - இரை

எங்கும் இல்லா நிலையில் சிங்கம்

தவித்துப் போனது!

ஐந்து பசுக்கள் சேர்ந்த கூட்டம்

கண்ணில் பட்டது - இன்று

அடையும் வேட்டை நிறைய என்று

எண்ணிக் கொண்டது!

ஆசை கொண்ட சிங்கம் பசுவைத்

தாக்க நினைத்தது! - முகத்தில்

மீசை துடிக்க பசுவைப் பார்த்து

பாய்ந்து சென்றது!

சிங்க ராஜா அருகில் வந்த

ஓசை கேட்டது! - பசுக்கள்

ஐந்தும் ஒன்றாய் இணைந்து நின்று

திரும்பிப் பார்த்தது!

ஒன்றைத் தாக்க பாய்ந்த போது

நான்கு பசுக்களும் - சிங்கத்தை

ஒன்றாய்ச் சேர்ந்து முட்டித் தள்ளி

தூர எறிந்தது!

பாய்ந்து வந்த சிங்க ராஜா

பயத்தில் நடுங்கியே - உடல்

ஓய்ந்த நிலையில் காட்டின் உள்ளே

ஓடி மறைந்தது!

ஒற்றுமைதான் உலகைக் காக்கும்

என்ற தத்துவம் - இதை

உணர்ந்து மக்கள் வாழ்ந்து விட்டால்

ஓங்கும் நம் பலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments