சரித்திரம் தமிழால் படைத்திடுவாய்!
'விபரம்' என்று எழுதாதே!- தம்பி 'விவரம்' என்றே எழுதிடு!
'விபரம்' என்று எழுதாதே!- தம்பி
'விவரம்' என்றே எழுதிடு!
'பயணமாளிகை' என்று எழுதாதே!- தம்பி
Advertisement
Advertisement
'பயணியர் மாளிகை' என்றெழுது!
'பொழிவு' என்று எழுதாதே!- தம்பி
'பொலிவு' என்றே எழுதிடு!
'சுவற்றில்' என்று எழுதாதே!- தம்பி
'சுவரில்' என்றே எழுதிடு!
'வண்ணாத்திப்பூச்சி' தவறாகும்- தம்பி
'வண்ணத்துப்பூச்சி'யே சரியாகும்!
'அடையார்' என்பது தவறாகும்!
'அடையாறு' என்பதே சரியாகும்!
'கருப்பு' என்பது நிறம் குறிக்கும்- தம்பி
'கறுப்பு' என்பது கபடாகும்!
சரியாய் பேசு! சரியாய் எழுது- தம்பி
சரித்திரம் தமிழால் படைத்திடுவாய்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.