பறக்கும்போது கொஞ்சம் உறக்கம்..!
உலகில் பறக்கும்போதே தூங்கும் பறவைகள் உள்ளன. அவற்றில் சில.
உலகில் பறக்கும்போதே தூங்கும் பறவைகள் உள்ளன. அவற்றில் சில.
ஆல்பைன்ஸ் ஸ்விஃப்ட்
மிக நீண்ட நேரம் பறக்கக் கூடிய இந்தப் பறவைகள் இனப்பெருக்கத்தின்போது மட்டுமே தரையிறங்குகின்றன. பல மாதங்கள்கூட பறக்கும். மிக உயரத்தில் சறுக்கிப் பறக்கும்போது, சில நேரம் அவற்றால் தூங்க முடியும்.
Advertisement
Advertisement
பெரிய ஃப்ரிகேட்
வெப்ப மண்டலக் கடல்களுக்கு மேலே காற்றில் வாரக் கணக்கில் பறந்து, சில விநாடிகள் மட்டுமே தூங்கக் கூடியவையாகும். பறக்கும்போது அவை ஒரு பக்க தூக்க முறையைப் பயன்படுத்துகின்றன. இதனால் அவை தங்கள் பாதுகாப்பையும் பறத்தலின் மீதான கட்டுப்பாட்டையும் உறுதி செய்வதற்காக மூளையின் ஒரு பகுதியை விழித்திருக்கச் செய்கின்றன.
ஸ்விஃப்ட்
வாழ்நாளின் பெரும் பகுதியை வானிலேயே கழிக்கும் இந்தப் பறவைகள், இனப்பெருக்கத்தின்போது தரை இறங்கும். பறக்கும்போது அவை எவ்வாறு ஓய்வெடுக்கின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் இன்னமும் ஆய்வு செய்து
வருகின்றனர். மிக உயரத்தில் சறுக்கிப் பறக்கும்போது, அவை குறுகிய நேரம் தூங்கும்.
சூட்டி டெர்ன்
கடற்பறவையான இவை பல மாதங்கள் காற்றில் நிலைத்திருக்கக்கூடியது. இவை வெப்ப மண்டலக் கடல் பரப்புகளின் மேல் நீண்ட தூரம் பறக்கின்றன. ஆயிரக்கணக்கான கி. மீ. கடற்பரப்பையும் இவை சர்வ சாதாரணமாகக் கடக்கும். நீண்ட பயணங்களின்போது ஆற்றலைச் சேமிப்பதற்காக அவை சறுக்கிப் பறக்கும் போது சிறு இடைவெளிகளில் ஓய்வெடுக்கின்றன.
அல்பட்ராஸ்
மிகப் பெரிய இறக்கைகள் கொண்ட இவை தென் பெருங்கடலின் மீது எளிதாகப் பறந்து செல்வதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்கின்றன. அது தன் இறக்கைகளை எல்லா நேரமும் அடித்துக் கொண்டிருப்பதில்லை. மாறாக, காற்று நீரோட்டங்களைப் பயன்படுத்தி, நீண்ட நேரம் காற்றில் நிலைத்திருக்கிறது. அப்போது குறுகிய நேர உறக்கத்தை மேற்கொள்கின்றன.
பார் டெயில்ட் காட்வி
11நாள்கள் தரை இறங்காமல் பறக்கும் இந்தப் பறவைகளால் குறைந்த நேரத்தில் தூங்கி எழமுடியும்.
வடக்கு கேனட்
வலிமையான இந்தப் பறவைகள் பெரும்பாலும் கடலுக்கு மேலே மீன்களை வேட்டையாடும். பயணங்களில் திறமையான வட்டமிடுதல், சிறு ஓய்வுகளின் ஒருங்கிணைப்பால் அவற்றால் காற்றில் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியும். கடற்பறவைகளைப் போலவே இவை ஒரு பக்க மூளை உறக்கம் என்ற திறனைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.