மீண்டும் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை
தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா வியாழக்கிழமை சோதனை நடத்தியதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா வியாழக்கிழமை சோதனை நடத்தியதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வட கொரியா அடையாளம் தெரியாத பல ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி பரிசோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் தரையிலிருந்து கடலில் செல்லும் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனை கேங்வோன் மாகாணம் வொன்சன் நகரத்துக்கு அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கண்காணிப்பு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து வாரங்களில் வட கொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும். ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை எச்சரிக்கைகளை மீறி வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.