முகப்பு
உலகம்

தலிபான் குறித்து சிறுமி எழுதிய கடிதம்: ஏஞ்சலினா ஜோலி உருக்கம்

தலிபான் குறித்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனக்கு எழுதிய கடிதத்தை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Updated On : 21 ஆகஸ்ட் 2021, 12:48 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தலிபான் குறித்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனக்கு எழுதிய கடிதத்தை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் தலிபான்கள் மேற்கொண்டுவரும் வன்முறைச் செயல்களை கண்டித்து பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வரிசையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சேர்ந்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமி ஒருவர் கைப்பட எழுதிய கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், உலகம் முழுவதும் மனித உரிமைகளுக்காக போராடுபவர்களின் குரல்களை பகிர்வதை நோக்கமாக கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். போரின் காரணமாக பெரும் பாதிப்படைந்துள்ள ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

Advertisement

இதுகுறித்து அச்ச உணர்வையும் ஆதரவற்ற நிலையையும் கடிதத்தில் வெளிப்படுத்திய சிறுமி, "20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உரிமைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்க்கையே இருளில் மூழ்கியுள்ளது. சுதந்திரத்தை இழந்து மீண்டும் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஏஞ்சலினா ஜோலி குறிப்பிடுகையில், "சமூக வலைதளங்களில் சுதந்திரமான கருத்துகளை பகிரமுடியாத நிலையில் ஆப்கன் மக்கள் தற்போது உள்ளனர். இரட்டை கோபுர தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில்தான் இருந்தேன்.

அப்போது, தலிபான்களிடமிருந்து தப்பித்து வந்த அகதிகளை அங்கு கண்டேன். அச்சத்தின் காரணமாக நாட்டை விட்டு மக்கள் மீண்டும் வெளியேறுவதை கண்டால் போரமாக உள்ளது" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments