மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்தது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,203 கன அடியாக சரிந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,203 கன அடியாக சரிந்தது.
கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 28,203 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 33,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 10,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 64 கோடியை தாண்டியது!
அணையின் நீர்மட்டம் 120.06 அடியாகவும், நீர் இருப்பு 93.56 டி.எம்.சி யாகவும் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.