FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உக்ரைனுக்கு நீண்ட தொலைவு ஏவுகணைகள்

ரஷியாவுக்கு எதிராகப் போரிட உக்ரைனுக்கு நீண்ட தொலைவு ஏவுகணைகளை வழங்கி வருவதாக பிரிட்டன் வியாழக்கிழமை அறிவித்தது.

Updated On : 12 மே 2023, 1:43 am IST
பகிர்:

ரஷியாவுக்கு எதிராகப் போரிட உக்ரைனுக்கு நீண்ட தொலைவு ஏவுகணைகளை வழங்கி வருவதாக பிரிட்டன் வியாழக்கிழமை அறிவித்தது.

இது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் கூறியதாவது:

250 கி.மீ. வரை பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட ‘ஸ்டாா்ம் ஷேடோ’ ரக ஏவுகணைகளை உக்ரைனுக்கு வருகிறோம்.

Advertisement

Advertisement

அந்த வகை ஏவுகணைகள் ஏற்கெனவே உக்ரைனில் உள்ளன; அல்லது அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்றாா் அவா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

அதனையும் மீறி நேட்டோ அமைப்பில் இணைய வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்காவும், பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

மேலும், உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகள், எறிகணைகள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பி வருகின்றன.

இதன் மூலம் உக்ரைன் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாகவும், இது உக்ரைன் போரை நேட்டோவுக்கும் தங்களுக்கும் இடையிலான, அணு ஆயுத மோதல் அபாயம் நிறைந்த போராக விரிவுபடுத்தும் என்று ரஷியா எச்சரித்து வருகிறது.

இந்த நிலையில், தொலைதூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பி வருவதாக பிரிட்டன் தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments