வெள்ளை மாளிகையில் இந்திய தேசியக்கொடி!
பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறாா். ஜூன் 21 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பிரதமரின் வருகையையொட்டி வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடியுடன் மூவர்ணக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளின் வர்த்தகம், வளர்ச்சி குறித்து பேசுகிறார்.
மேலும் இந்தியர்கள் கலந்துகொள்ளும் சிறப்புக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.