சீனாவின், தன்னாட்சிப் பகுதியாக அறியப்படும் திபெத்தில் இன்று (டிச. 25) ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில், இன்று மதியம் 12.04 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திபெத்தின் மற்றொரு பகுதியில், நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மதியம் 1.07 மணியளவில், 4.1 ரிக்டர் அளவிலான புதியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால், நல்வாய்ப்பாக உயிர் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கங்களின் பின்அதிர்வுகள் உருவாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, திபெத்தில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதல் கிறிஸ்துமஸ் உரையில் காஸாவை நினைவுகூர்ந்த போப் 14 ஆம் லியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.