யோஷித ராஜபக்ச 
உலகம்

மோசடி: ராஜபக்ச மகன் கைது!

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது.

DIN

பணமோசடி வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச மீதான பணமோசடி புகாரில் அந்த நாட்டின் குற்றப் புலனாய்வு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்த வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு யோஷித ராஜபக்சவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உறுதியானதையடுத்து யோஷித ராஜபக்ச இன்று பெலியட்டா பகுதியில் சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைக்குப் பிறகு யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்மணி அன்னதான விருந்து - நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!

வர்த்தக பேச்சு, ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் இரண்டாவது நாளாக உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

SCROLL FOR NEXT