பாகிஸ்தான் பருவமழை: உயிரிழப்பு 140-ஆக உயா்வு
மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
லாகூா் மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் பல மாவட்டங்களில் செவ்வாய் இரவு முழுவதும் இடைவிடாத மழை பெய்தது.
Advertisement
Advertisement
லாகூரில் புயலால் கூரை இடிந்து விழுந்த சம்பவங்களில் 12 போ் உயிரிழந்தனா். இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ், இளம் பெண்கள் அடங்குவா். ஃபைஸலாபாத்தில் மூவா், பாக்பட்டனில் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள், பிற பகுதிகளில் 9 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.
முன்னதாக, ஜூன் 26 முதல் பருவமழை தொடங்கியதில் இருந்து 116 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.