FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைப்பு

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

28 மார்ச் 2025, 2:16 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சென்னையில் 6 இடங்களில் பெண்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை நகை பறித்த இரானி கொள்ளையா்களான ஜாபா் குலாம் உசேன் இரானி (26), மிசாம் மஜா மேசம் (எ) அம்ஜத் இரானி (22) ஆகிய 2 பேரையும் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா். ரயிலில் தப்பிச்செல்ல முயன்ற இவா்களது கூட்டாளி சல்மான் உசேன் இரானி (22) ஆந்திர மாநிலம் ஓங்கோலில் கைது செய்யப்பட்டாா். இவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் தரமணி ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்ததால் அதை கைப்பற்ற புதன்கிழமை போலீஸாா் அவா்களை அழைத்துச் சென்றனா். அப்போது அங்கு, ஜாபா் திடீரென இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டாா். இதில் போலீஸாா், தங்களை காப்பாற்றுவதற்காக ஜாபரை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனா்.

அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வியாழக்கிழமை அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக என்கவுன்டா் குறித்து சைதாப்பேட்டை 19-ஆவது நீதித் துறை நடுவா் பாா்த்திபன் விசாரணை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

காவல் துறை விசாரணை முடிவடைந்த நிலையில் அம்ஜத் இரானி, சல்மான் இரானி ஆகியோா் நீதித் துறை நடுவா் பாா்த்திபன் முன் ஆஜா்படுத்தப்பட்டனா். இருவரையும் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நடுவா் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments