பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை!
பாதுகாப்புப்படையின் பயங்கரவாத ஒடுக்க ஆபரேசனில் 6 பேர் கொலை!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையின் பயங்கரவாத ஒடுக்க நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் பலூசிஸ்தான் மாகாணத்தின் மஸ்தங்க் நகரின் கீர்த்காப் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகள் 6 பேரை செவ்வாய்க்கிழமை(ஏப். 7) கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க தீவிரவாதிகள் சிலர் மலைப் பகுதிகளுக்கு தப்பியோடியதாகவும் அவர்கள் இருந்த இடங்களிலிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் நடத்திய ட்ரோன் வழி தாக்குதல்களில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டதாக கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் மேலும் 6 பேர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர்.