இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக 2 நாள்களுக்குள் இஸ்லாமாபாதில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மாற்றுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அவரின் குடும்பத்தினரும் ஆதரவாளா்களும் தொடா்ந்து கவலை தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வரும் செப். 16-ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை அவா் மருத்துவமனையிலேயே தங்கி, சிகிச்சை பெறுவாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.