எபோலா பரவலுக்கு இடையே காங்கோவில் மீண்டும் விமான சேவை!
காங்கோ நாட்டின் முக்கிய விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறித்து...
காங்கோ நாட்டில், எபோலா பரவலுக்கு இடையே அந்நாட்டின் முக்கிய விமான நிலையம் மீண்டும் விமான சேவைக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. உகாண்டா, காங்கோ ஆகிய நாடுகளில் மட்டும் எபோலாவுக்கு இதுவரை 246 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இத்துரி மாகாணத்தின் புனியா நகரத்திலுள்ள காங்கோவின் முக்கிய விமான நிலையம் சுமார் 10 நாள்களுக்குப் பிறகு இன்று (ஜூன் 2) விமான சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, எபோலா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் சூழல் தற்போது நிலவுவதாகவும் காங்கோ அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எபோலா பரவலால் காங்கோவில் மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக இயக்கப்படும் விமானங்களைத் தவிர மற்ற அனைத்து விதமான போக்குவரத்து விமானங்களின் சேவையும் கடந்த மே 23 அன்று நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Amidst the spread of Ebola in the Congo, the country's main airport has reopened for flight operations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.