ரூ. 940 லட்சம் கோடி சம்பாதிப்பது சாத்தியம்தான்: எலான் மஸ்க்
ரூ. 940 லட்சம் கோடி சம்பாதிப்பது குறித்து எலான் மஸ்க் கூறியது என்ன...
உலகின் முதல் குவாடிரில்லியனராவது சாத்தியமானதே என்று டிரில்லியனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்கு வந்ததையடுத்து, உலகின் முதல் டிரில்லியனராக எலான் மஸ்க் சாதனை படைத்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் உலகின் முதல் குவாடிரில்லியனராக ஆவதற்கு 998.9 டிரில்லியன் டாலர் மட்டுமே தேவை என சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதனை மறுபதிவிட்டு பதிலளித்த எலான் மஸ்க், நிச்சயமாக சாத்தியமானதுதான். ஆனால், அதற்கு சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஒரு குவாடிரில்லியன் என்பது இந்திய மதிப்பில் ரூ. 940 லட்சம் கோடி. எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 95 லட்சம் கோடி.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் 4.15 டிரில்லியன் டாலராக உள்ள நிலையில், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு மட்டும் இந்திய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட கால் பங்கை (25%) நெருங்கியுள்ளது.
Elon Musk says he may even become a quadrillionaire
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.