டிரம்ப் விதித்த புதிய 10% வரி சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான டிரம்ப்பின் வரியை சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
உலகளாவிய நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 10 சதவிகித வரியை சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் வருவாயை அதிகரிப்பதற்காகவும், வர்த்தகப் பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுப்பதற்காகவும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், உலக நாடுகள் மீதான டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிப்ரவரியில் ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவிகித வரியை டிரம்ப் அறிவித்தார். ஆனால், மீண்டும் உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் வரிவிதிப்பை சட்டவிரோதமானவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Advertisement
Advertisement
இருப்பினும், வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
US trade court rules against President Donald Trump's global 10% tariff
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.