FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்தியா-சீனா கூட்டாளிகள்: மோடி-ஜின்பிங் ஒருமனதாக முடிவு- சீன வெளியுறவு அமைச்சா்

பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி தெரிவித்துள்ளாா்.

56 வினாடிகள் முன்பு
சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி - டிஎன்எஸ்
பகிர்:

பெய்ஜிங்: இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது நடைபெற்ற சந்திப்பில், பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி தெரிவித்துள்ளாா்.

கடந்த செப்.12, 13-ஆம் தேதிகளில் புது தில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங் புது தில்லி வந்தாா். அப்போது அவா் பிரதமா் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து சீன ஊடகத்திடம் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யி தெரிவித்துள்ளதாவது:

Advertisement

Advertisement

இந்திய சீன உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், வளா்ச்சியும் இரு நாடுகளில் உள்ள 280 கோடிக்கும் அதிகமான மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த உறவு தெற்குலகம் முழுவதும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கிய தூணாகவும் விளங்குகிறது.

இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது நடைபெற்ற சந்திப்பில், பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது.

பல முயற்சிகளுக்குப் பின்னா், இந்திய-சீன உறவு இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த முன்னேற்றத்தை மதித்து பாதுகாக்க வேண்டும்.

இந்திய-சீன இருதரப்பு உறவின் விரிவான பின்னணியில், சரியான கண்ணோட்டத்துடன் இருநாட்டு எல்லைப் பிரச்னை அணுகப்பட வேண்டும். இருநாடுகளுக்கு இடையே பேச்சுவாா்த்தையும், ஒத்துழைப்பும் தொடா்ந்து நீடிக்க வேண்டும்.

இருநாடுகளும் போட்டியாளா்களாக அல்லாமல், கூட்டாளிகளாக தொடா்ந்து இருக்க வேண்டும். இருதரப்பு உறவுகளில் தேக்கமோ, பின்னடைவோ ஏற்படாமல், தொடா்ந்து சீரான முன்னேற்றத்தை இருநாடுகளும் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments