FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

வடமேற்கு நேபாளத்தில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இதனால் உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எவ்வித உடனடித் தகவலும் இல்லை.

16 செப்டம்பர் 2026, 11:26 pm IST
பகிர்:

வடமேற்கு நேபாளத்தில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இதனால் உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எவ்வித உடனடித் தகவலும் இல்லை.

தேசிய நில அதிா்வு ஆய்வு மையத்தின் தகவல்படி அதிகாலை 1.51 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது.

தொடா்ந்து, அதிகாலை 4.28 மணிக்கு ஏற்பட்ட 2-ஆவது நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 4.2 அலகுகளாகப் பதிவானது. இது முகு மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் அதிா்வுகள் அண்டை மாவட்டங்களான டோல்பா, ஜும்லாவிலும் உணரப்பட்டன.

Advertisement

Advertisement

திபெத்தில் பனிமலை வெடிப்பைத் தொடா்ந்து கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் நேபாளம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments