பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரிவான செய்திக்கு..
நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது. இங்கு பாதிப்பு எண்ணிக்கையோடு பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதன்படி மாநிலத்தில் இன்று மட்டும் கரோனாவால் அதிகபட்சமாக ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 2,098ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 2,682 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 62,228ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது. இங்கு பாதிப்பு எண்ணிக்கையோடு பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதன்படி மாநிலத்தில் இன்று மட்டும் கரோனாவால் அதிகபட்சமாக ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 2,098ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 2,682 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 62,228ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரில் தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 618 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சூரத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ரயில் 9 நாள்கள் பயணித்து பிகார் மாநிலம் சிவான் பகுதிக்குச் சென்றடைந்ததாக வரும் தகவல்கள் பொய் என்று இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஜான்ஸி ரயில்நிலைய பணிமனையில் ரயில்களை தூய்மைப்படுத்தும் பணியின் போது, புலம்பெயர் தொழிலாளியின் அழுகிய உடல் கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,106 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. விரிவான செய்திக்கு..
நீரிழிவு, ரத்தக் கொதிப்புப் போன்ற உடல் நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் ரயில் பயணத்தைத் தவிர்க்கலாம் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை மருத்துவக் குழுவுடன் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். விரிவான செய்திக்கு..
மாநிலங்களவைச் செயலக இயக்குநர் மற்றும் அவரது மனைவி, பிள்ளைக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மும்பையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அனைத்து படுக்கை வசதிகளும் நிரம்பிவிட்டதாக மும்பை மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இதுவரை சமூகப் பரவல் இல்லை என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
நாடு முழுவதும் பொது முடக்கம் மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்படலாம் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு...
ஜம்மு காஷ்மீரில் கரோனா அதிகம் பரவும் அபாயம் உள்ள ஷோபியான் பகுதியில் இருந்து உரிமையாளரை சுமந்து வந்த குதிரையையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,203-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்துள்ளது. அண்ணாநகரிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டியது. விரிவான செய்திக்கு..
மத்தியப் பிரதேசத்தில் திருமண விழாவில் கலந்துகொண்ட ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து புதுமணத் தம்பதிகள் உள்பட 95 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
தில்லியில் ஒரேநாளில் புதிதாக 1,024 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தாராவியில் புதிதாக 36 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரில் தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 559 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 138 போ் மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 50 நாள்களுக்குப் பிந்தைய அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும்.
நாட்டில் ஊரடங்கு காலம் முடிந்த பிறகுதான் கரோனா தீவிரமாகும் என்று தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தின் மருத்துவ நிபுணர் டாக்டர் வி. ரவி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அறிகுறிகள் அற்ற கரோனா வைரஸின் பாதிப்பு நாம் நினைத்ததை விட அதிகமாக இருக்கலாம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனாவால் பாதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
நேபாளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி கரோனா தொற்றால் 1,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிரத்தில் 2,190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56,948 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்ள முகக்கவசத்தை அணிந்து கொண்டாலும், அதனால் சில அசௌகரியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் நாம் யார் என்றே எதிரில் வருவோருக்குத் தெரியாமல் போவது. விரிவான செய்திக்கு..
தன்னிடம் பணியாற்றிய 10 புலம்பெயர் தொழிலாளர்களை விமானத்தில் டிக்கெட் எடுத்து சொந்த மாநிலமான பிகாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தில்லி விவசாயி. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் மேலும் 131 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இண்டிகோ விமானத்தில் பெங்களுருவில் இருந்து மதுரை வந்த பயணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..