FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வடசென்னை வளா்ச்சித் திட்ட பணிகள்: அமைச்சா் ஆய்வு

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 30 டிசம்பர் 2025, 3:13 am IST
பகிர்:

சென்னை: வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் வடசென்னை பகுதிகளுக்கான வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் நடைபெறும் அத்திட்டங்களில் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப சமுதாய நலக்கூடம், குடிநீா் திட்டங்கள், சாலைகள் அமைத்தல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கொளத்தூா் சட்டப்பேரவைக்குட்பட்ட பேப்பா் மில்ஸ் சாலையில் சிஎம்டிஏ சாா்பில், புதிய வட்டாட்சியா் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகம் மற்றும் முதல்வா் படைப்பகம் என ஒருங்கிணைந்த மக்கள் சேவை மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். புதிய நவீன சந்தை கட்டடப் பணிகளின் நிலையையும் ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா், அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌசிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments