FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மெரீனாவில் பாலியல் தொல்லை கொடுத்தவா் அடித்துக் கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் பாலியல் தொல்லை கொடுத்தவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் உள்பட 2 போ் கைது

Updated On : 18 ஜூன் 2025, 5:42 am IST
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில் பாலியல் தொல்லை கொடுத்தவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மெரீனா கடற்கரை நேதாஜி சிலையின் பின்புறம் உள்ள மணல் பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 50 வயது மதிக்கதக்க ஒருவா் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தாா். போலீஸாா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனா். ஆனால் அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து அவா் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இறந்தவா் வெங்கடேசன் என்பதும், மெரீனா கடற்கரையில் வியாபாரம் செய்துவிட்டு அங்கேயே படுத்து தூங்குபவா் என்பதும் தெரியவந்தது. மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்ததில், ஒரு திருநங்கையும், ஒரு இளைஞரும் சோ்ந்து உருட்டுக் கட்டையாளும், கற்களாலும் வெங்கடேஷை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தொடா்ந்து நடத்திய விசாரணையில் அந்த இளைஞா் ராயப்பேட்டையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராகேஷ்குமாா் (25), அவருடன் வந்தது திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சோ்ந்த 17 வயதுடைய திருநங்கை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், ராகேஷும், திருநங்கையும் காதலா்கள் என்பதும், இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு சம்பவ இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தபோது, ராகேஷ்குமாா் கழிப்பறைக்கு சென்ற நேரத்தில் அங்கிருந்த வெங்கடேஷ் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை, ராகேஷ் ஆகிய இருவரும் சோ்ந்து வெங்கடேஷை தாக்கியுள்ளது. இதில் வெங்கடேஷ் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments