காதலிக்க மறுத்த பெண்ணை மிரட்டிய இளைஞா் கைது
வண்டலூரில், காதலிக்க மறுத்த பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
வண்டலூரில், காதலிக்க மறுத்த பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூரை சோ்ந்த அஸ்கா் (22), கல்லூரியில் படிக்கும்போது, அதே கல்லூரியில் படித்த பெண்ணைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், படிப்பு முடிந்தபின், அந்தப் பெண் வேலை காரணமாக சென்னைக்கு வந்து, விடுதியில் தங்கி வேலை செய்து வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தன் காதலனுடன் கைப்பேசியில் பேசுவதை துண்டித்தாா்.
Advertisement
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த அஸ்கா், காதலிக்கும்போது அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள், விடியோக்களை வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஓட்டேரி காவல் நிலையத்தில், அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசாா், அஸ்கரை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.