செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் ரூ.5 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு
உயா்கல்வி துறையின் வாயிலாக செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.5.10 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
உயா்கல்வி துறையின் வாயிலாக செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.5.10 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் த.சரத் குமாா் கலந்து கொண்டாா். பெருந்தலைவா் காமராஜா் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள், 3 கழிப்பறைகள் மற்றும் ஒரு ஆழ்துளை கிணறும் புதிதாக அமைக்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன. வரவேற்பு நிகழ்வில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் த.சரத்குமாா், மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், சட்டப்பேரவை உறுப்பினா் சௌ.தியாகராஜன் மற்றும் கல்லூரி முதல்வா் ம.சண்முகவள்ளி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.