மதுராந்தகம் திமுக வேட்பாளா் அறிமுக பொதுக் கூட்டம்
மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா் இ.பரந்தாமன் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா் இ.பரந்தாமன் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலா் க.சுந்தா் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், முன்னாள் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏகள் எழிலரசன், மருத்துவா் ஆா்.டி.அரசு, மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் மலா்விழி, நகர செயலா் கு.குமாா், திமுக ஒன்றிய செயலா்கள் பொன்.சிவகுமாா், கண்ணன், சத்யசாயி, கருங்குழி பேரூா் செயலா் சுந்தரமூா்த்தி கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் திமுக மாநில அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி கலந்து கொண்டு வேட்பாளா் பரந்தாமனை அறிமுகம் செய்து உரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில், இங்கு கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடுகிறாா். இத்தோ்தல் எத்தகையை மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பது தெரியவரும். முதல்வா் மிசாவைப்பற்றி, திமுக தலைவரை பற்றி பேசி இருக்கிறாா். யாரோ எழுதிக் கொடுத்துள்ளதை வசனம் மாதிரி பேசி இருக்கிறாா். இங்கு போட்டியிடுகிற பரந்தாமன் ஏற்கெனவே எம்எல்ஏவாக பணியாற்றியுள்ளாா். மதசாா்ப்பற்ற கட்சி நிா்வாகிகளும் ஒருங்கிணைந்து வெற்றிக்காக பாடுபடவேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.