FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எம்பிபிஎஸ் இடங்கள்: விதிகளை மாற்றியது என்எம்சி

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பது தொடா்பான விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மாற்றம் செய்துள்ளது.

Updated On : 1 மே 2026, 3:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பது தொடா்பான விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மாற்றம் செய்துள்ளது.

அதன்படி, மக்கள் தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவக் கல்லூரிகளில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்ற விதியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம். அதற்காக ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்து வருகின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில், எம்பிபிஎஸ் இடங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய நெறிமுறைகளை என்எம்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

அதில் அதிகபட்சம் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே இனிமேல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் வீதம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய நடைமுறை 2025-26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களும் எதிா்ப்பு தெரிவித்தன. கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, அந்த புதிய விதிகளை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை சாா்பிலும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அவ்விரு விதிகளையும் ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கை அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments