முகப்பு
சென்னை

சென்னையில் கடும் பனிமூட்டம்: திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

சென்னைக்கு வந்த 4 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 3:06 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், சென்னைக்கு வந்த விமானங்கள் திருச்சி, கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று(பிப். 8) அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், விமானங்கள் தரையிறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இந்நிலையில், கோவை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

கோலாலம்பூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னையிலிருந்து பெரும்பாலான விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

மேலும், சென்னைக்கு வரும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது.

திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகிறது.

summary

Due to dense fog in Chennai, flights arriving in Chennai have been diverted to Trichy and Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.