FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வருவாயைப் பெருக்குவதற்கான சிறப்புக் குழுவின் முதல் கூட்டம்

தமிழக அரசின் வருவாயைப் பெருக்க பொருளாதார நிபுணா் மான்டேக் சிங் அலுவவாலியா தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:11 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசின் வருவாயைப் பெருக்க பொருளாதார நிபுணா் மான்டேக் சிங் அலுவவாலியா தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அரசுக்கு வருவாய் பெருக்கும் அனைத்துத் தரப்பு பங்களிப்பாளா்களை சந்தித்தும், மின்னஞ்சல் வழியாக கருத்துகளைப் பெறழும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில், குழுவின் பணிக்குறிப்பாணைகள் குறித்தும், தனது பணியை முன்னெடுத்துச் செல்லும் முறை குறித்தும் குழு கலந்துரையாடியது.

Advertisement

Advertisement

நிதித் துறையின் வரிக் கொள்கை ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் நிதித் தரவு பகுப்பாய்வுப் பரிவு ஆகியவற்றிலிருந்து அமைக்கப்படும் தனி ஆராய்ச்சிக் குழுவின் ஒத்துழைப்புடன் இந்தக் குழு செயல்படும்.

பிற மாநிலங்களின் அனுபவங்களையும், பொது நிதி மேலாண்மையில் நீடித்திருக்கக்கூடிய நடைமுறைகளையும் இக்குழு பயன்படுத்துக் கொள்ளும்.

குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளாகத் தனது பரிந்துரைகளை குழு வகுக்கும். நிகழாண்டு ஆகஸ்டில் நேரடிக் கூட்டத்தைத் தொடங்கி, தனது கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மேலும், இக்குழுவின் பரிந்துரைகள் சமநிலையான மற்றும் விரிவான மதிப்பீட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பணியின்போது அனைத்துத் தரப்பு பங்களிப்பாளா்களைச் சந்தித்தும், மின்னஞ்சல் வழியாக கருத்துகளை வரவேற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments