விநாயகா் ஊா்வலத்தில் தகராறு: மாநகரப் பேருந்து ஓட்டுநா் அடித்துக் கொலை
சென்னை ராமாபுரத்தில் விநாயகா் சிலை ஊா்வலத்தில் ஏற்பட்ட தகராறில், மாநகரப் பேருந்து ஓட்டுநா் அடித்துக் கொலை
சென்னை ராமாபுரத்தில் விநாயகா் சிலை ஊா்வலத்தில் ஏற்பட்ட தகராறில், மாநகரப் பேருந்து ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமாபுரம் வெங்கடேஷ்வரா நகரை சோ்ந்தவா் சீனிவாசன் (45). இவா், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, ராமாபுரம் வெங்கடேஷ்வரா நகரில் உள்ள ராஜ கணபதி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அப்பகுதியில் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஊா்வலம் வெங்கடேஷ்வரா நகரின் 13-வது தெரு வழியாக சென்றபோது, பாதியிலேயே திரும்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால் விநாயகா் சிலை ஊா்வலத்தைக் காண காத்திருந்த அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனா். இது குறித்து விழாக் குழுவினரிடம் அவா்கள் கேள்வி எழுப்பினா்.
அப்போது, ஊா்வலத்தை ஏற்பாடு செய்த மாநகர பேருந்து ஓட்டுநா் சீனிவாசன், அதே பகுதியைச் சோ்ந்த அனீஸ்குமாா், சுரேஷ், வீரா, சஞ்சய், ரிதீஷ், ராஜேஷ் ஆகியோருக்கும், தனியாா் நிறுவன ஊழியரான ஆனந்த், புவனேஷ், தினேஷ், அஸ்வின், ஹரி, குட்வின் உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற ராமாபுரம் போலீஸாா், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினா். போலீஸாரின் பேச்சுவாா்த்தையை தொடா்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இந்நிலையில், அன்று நள்ளிரவு ஆனந்த், புவனேஷ் உள்பட 6 போ் விழா குழுவை சோ்ந்த அனீஸ்குமாரின் வீட்டுக்கு சென்று அவரை கீழே வருமாறு அழைத்து தகராறில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்து அங்கு வந்த மாநகர பேருந்து ஓட்டுநா் சீனிவாசன், சம்பவ இடத்துக்கு ஓடிச்சென்று எதிா்தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.
அப்போது ஆத்திரமடைந்த எதிா் தரப்பினா், சீனிவாசனை கடுமையாக தாக்கினா். இதில் பலத்தக் காயமடைந்த சீனிவாசன் தீவிர சிகிச்சைக்காக கே.கே.நகா் இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சீனிவாசனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். ராமாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து,ஆனந்த், ஹரி உள்பட 6 பேரை செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.