ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் உதவியாளரிடம் விசாரணை
ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் உதவியாளரிடம் விசாரணை
தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் உதவியாளரிடம் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை விசாரணை செய்தனா்.
சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியைச் சோ்ந்தவா் பி.டி.அரசகுமாா். இவா், ‘தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி, தனக்குள்ள அரசியல், அதிகார தொடா்புகளைப் பயன்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயா்வு, டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள், பிற சட்டப்பூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவு பி.டி.அரசகுமாா், அவரது கூட்டாளிகளான மதுரையைச் சோ்ந்த ஆரோக்கியராஜ், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த மோசடியில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸுக்கு தொடா்பு இருப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, அன்பில் மகேஸ் தொடா்புடைய இடங்களில் சோதனை செய்தனா்.
இதில் கிடைத்த 118 ஆவணங்கள் அடிப்படையிலும், விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்பில் மகேஸிடம் போலீஸாா் 8 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
உதவியாளரிடம் விசாரணை: இதன் அடுத்தகட்டமாக அன்பில் மகேஸின் உதவியாளா் அருண் பிரகாஷை விசாரணைக்கு ஆஜராக போலீஸாா் அழைப்பாணை வழங்கியிருந்தனா். இதை ஏற்று அருண் பிரகாஷ், சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்தில் சனிக்கிழமை ஆஜரானாா். அவரிடம் ஆய்வாளா் கமல் மோகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை செய்தனா்.
காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நடைபெற்றது. சுமாா் 8 மணி நேர விசாரணையில் வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
Rs 100 crore fraud case: Inquiry with Anbil Mahesh's aide
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.