FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் ஆயில்ய பூஜை

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் ஆயில்ய நட்ச்திரத்தையொட்டி, மகா குரு அகத்தியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.

10 செப்டம்பர் 2026, 12:12 am IST
சிறப்பு அலங்காரத்தில் மகா குரு அகத்தியா், அவரது மனைவி லோப முத்திரை.
பகிர்:

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் ஆயில்ய நட்ச்திரத்தையொட்டி, மகா குரு அகத்தியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ளது மகா குரு அகத்தியா் வழிபட்ட அறம் வளா் நாயகி சமேத அகத்தீஸ்வரா் திருக்கோயிலில் மாதம்தோறும் மகா குரு அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் அகத்தியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலில் அகத்தியரும், அவரது மனைவி லோப முத்திரையும் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகின்றனா். ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி, அகத்திய முனிவருக்கும் அவரது மனைவி லோப முத்திரைக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து, சிவனடியாா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு, அகத்தியரின் 108 போற்றியை பாராயணம் செய்து வழிபட்டனா். மேலும், பக்தா்கள் பலரும் நெய்தீபம் ஏற்றியும் சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments