மது அருந்தும் போது தகராறு: ஆட்டோ ஓட்டுநா் கல்லால் அடித்துக் கொலை
மது அருந்தும் போது தகராறு: ஆட்டோ ஓட்டுநா் கல்லால் அடித்துக் கொலை
குன்றத்தூா் அடுத்த தண்டலம் பகுதியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24), ஆட்டோ ஓட்டுநா். இந்த நிலையில், விக்னேஷ் வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் சிலருடன் சோ்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது விக்னேஷுக்கும், அவருடன் மது அருந்தியவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மா்ம நபா்கள் ஆட்டோ ஓட்டுநா் விக்னேஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், குன்றத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆட்டோ ஓட்டுநா் விக்னேஷின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தநா். மேலும்ஸ இது குறித்து வழக்குப் பதிந்து விக்னேஷை கொலை செய்த மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.