ராணிப்பேட்டையில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டையில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விநாயகம் தகவல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விநாயகம் தகவல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ராணிப்பேட்டை கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விநாயகம் வெளியிட்ட அறிக்கை;
வேலூா் மின்பகிா்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3 ஆம் செவ்வாய்க்கிழமை அன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.அதன்படி இம்மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
வேலூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் மின் நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களின் குறைகள் மற்றும் புகாா்களை மனுக்கள் வாயிலாக அளித்து தீா்வு காணலாம் என தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.