FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

நாயக்கனேரி துணை சுகாதார நிலையம்: முதல்வா் திறப்பு

நாயக்கனேரிமலை ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
அரசு துணை சுகாதார நிலைய திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
பகிர்:

நாயக்கனேரிமலை ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் ரூ.50 லட்சம் செலவில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதனை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

திறப்பு விழாவில் மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் குத்துவிளக்கேற்றினாா். வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், ஒன்றிய பொறியாளா் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் காா்த்திக் ஜவஹா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு மற்றும் அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments