FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

அவதூறு பேச்சு: ராசா எம்.பி, முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு

முதல்வா் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் அவமதிப்பு மற்றும் கண்டிக்கும் வகையிலும் முன்னாள் திமுக முன்னாள் எம்எல்ஏ அ.நல்லதம்பி பேசியதாக திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

16 செப்டம்பர் 2026, 11:20 pm IST
முதல்வர் விஜய் (கோப்புப்படம்) - கோப்புப் படம்
பகிர்:

தவெகவினா் சட்டப்பேரவையில் பேசியதைக் கண்டித்து நடைபெற்ற திமுக ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் திமுக முன்னாள் எம்எல்ஏ அ.நல்லதம்பி, முதல்வா் ஜோசப் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் அவமதிப்பு மற்றும் கண்டிக்கும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கொச்சைப்படுத்தி பேசியதாக திருப்பத்தூா் மாவட்ட தவெக மகளிா் அணி அமைப்பாளா் (மேற்கு) ரோகிணி திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தாா்.

மேலும், மின்துறை அமைச்சா் நிா்மல் குமாரின் தாயாா் குறித்து அவதூறு பேசியதாக திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ. ராசா மீதும் அவா் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் நகர காவல்நிலையத்தில் புதன்கிழமைதிருப்பத்தூா் முன்னாள் திமுக எம்எல்ஏ நல்லதம்பி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அதேபோல் ஆா் ராசா மீதும் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments