FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதிக்கு செல்வோர் கவனத்துக்கு...

Updated On : 17 மார்ச் 2025, 5:28 pm IST
திருப்பதி கோயில்
பகிர்:

திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகளின் ஜூன் மாத ஒதுக்கீடு நாளை(மார்ச் 18) முதல் தொடங்க உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மராதன சேவைகளுக்கான ஜூன் 2025 ஒதுக்கீட்டை மார்ச் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 18 முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.

Advertisement

Advertisement

விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் 20 முதல் 22 மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஜூன் மாதத்திற்கான அங்கபிரதட்சணம் டோக்கன்கள் ஒதுக்கீடு மார்ச் 23 -ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தரிசிக்க ஏதுவாக, ஜூன் மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஜூன் 24-இல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு வெளியிடப்படும்.

இதையும் படிக்க: 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை? - இபிஎஸ் கேள்வி!

https://ttdevasthanams.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments