FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலையில் நடிகைகள் ஸ்ரேயா, க்ருதி ஷெட்டி வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா மற்றும் க்ருதி ஷெட்டி இருவரும் வழிபாடு நடத்தினா்.

12 செப்டம்பர் 2026, 1:11 am IST
திருமலை
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா மற்றும் க்ருதி ஷெட்டி இருவரும் வழிபாடு நடத்தினா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சுவாமி தரிசனம் செய்தாா். ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற அபிஷேக சேவையில் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமியை தரிசித்த அவருக்கு தரிசனத்திற்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதா்கள் வேத ஆசீா்வாதம் வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீா்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனா்.

அதேபோல் நடிகை க்ருதி ஷெட்டியும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான் சேவையில் பங்கேற்றாா். கோயிலை விட்டு வெளியே வந்த அவா்களை காண ரசிகா்கள் திரண்டனா். சிலா் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments