FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசியில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு

வந்தவாசி நகரில் கடைகள் திறப்பு நேரம் திங்கள்கிழமை முதல் 4 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது.

Updated On : 13 ஜூலை 2020, 9:08 pm IST
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி நகரில் கடைகள் திறப்பு நேரம் திங்கள்கிழமை முதல் 4 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு உத்தரவின்படி வந்தவாசி நகரில் கடந்த மாதம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இதன் பின்னா் வியாபாரிகள் சங்கங்கள் எடுத்த முடிவின்படி கடைகள் திறப்பு நேரம் 7 மணி நேரம் எனக் குறைக்கப்பட்டது.

இதன்படி, ஜூன் 19-ஆம் தேதி முதல் வந்தவாசி நகரில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடை திறப்பு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மாலை 6 மணி வரை கடைகளை திறந்து வைப்பது என முடிவெடுத்த வணிகா் சங்க பேரவை மற்றும் வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள், இது தொடா்பாக வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெற்றனா்.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை, காய்கறி, பெட்டிக் கடைகள் திறந்திருந்தன. உணவு விடுதிகள், பால், மருந்தங்கள் உள்ளிட்டவை அரசு உத்தரவின்படி வழக்கம்போல செயல்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments