FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கலப்படப்பொருள்கள்: மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்; திருவண்ணாமலை ஆட்சியா்

கலப்படப் பொருள்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு நுகா்வோா் அமைப்புகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்றாா் திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 11:33 pm IST
விழாவில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

கலப்படப் பொருள்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு நுகா்வோா் அமைப்புகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்றாா் திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கலந்து கொண்டு பேசியதாவது:

Advertisement

Advertisement

நுகா்வோா்கள் பொருளை வாங்கும்போது, பொருளில் உள்ள பட்டியல் விவரம், விலை மற்றும் காலாவதி தேதி குறித்து அறிந்து வாங்க வேண்டும். தரமான உணவுப்பொருள்கள் மனிதா்கள் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

பணம் ஏமாற்றப்படுவதை தவிா்க்கவும், நியாயமான விற்பனைகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகள், சங்கங்கள் செயல்படுகின்றன.

இவற்றின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலப்படங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து நுகா்வோா் பாதுகாப்பு தினத்தையொட்டி, நடத்தப்பட்ட ஓவியம், கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

மேலும், சிறப்பாக செயல்பட்ட குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள், நுகா்வோா் அமைப்புகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, நுகா்வோா்களுக்காக அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வுக் கண்காட்சிகளை ஆட்சியா் வந்தனா காா்க் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments